330 மில்லியன் டாலரை இழந்த நேபாள சுற்றுலாத்துறை.!

Published by
murugan

நேபாளத்தின் சுற்றுலாத்துறைக்கு  330 மில்லியனுக்கும் அதிகமான  டாலரை இழப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த இழப்பு ஜூலை 21 வரை 332 மில்லியன் டாலரை  கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேபாள சுற்றுலா வாரியம் மற்றும் நேபாளத்தின் சிவில் ஏவியேஷன் ஆணையம் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு குழு, ஹோட்டல், பயணங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற துறையில் கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது  ஒவ்வொரு மாதமும் 83 மில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளதாக அந்த குழு கூறியது.

நேபாளில் கடந்த ஜூன் 10-ம் தேதி முதல் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது. பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் செயல்பட அனுமதித்தாலும், சுற்றுலாத் துறை, குறிப்பாக ஹோட்டல் மற்றும் விமானத்துறைகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படவில்லை.

உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை ஜூலை 21-ஆம் தேதி வரை தொடர்ந்து நிறுத்தி வைக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது. சுற்றுலாத்துறை பெரும் இழப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், நேபாள சுற்றுலா தொழில்முனைவோர் குழு நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் யோகேஷிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர்.

அதில், சில சுகாதார நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் திட்டமிடப்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை இயக்க விமானங்களை அனுமதிக்குமாறு சுற்றுலா தொழில் முனைவோர் அரசிடம் கேட்டுக் கொண்டனர்.

மேலும், சுற்றுலா வாகனங்களை இயக்க நேபாளி அரசு அனுமதிக்க வேண்டும், மலைகளில் இருந்து குப்பைகளை அகற்ற வேண்டும், சுற்றுலா தலங்களில் உள்கட்டமைப்பு மேம்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் சுற்றுலா தொழில் முனைவோர் கோரிக்கை வைத்தனர்.

நேபாளில் இதுவரை கொரோனாவால் 15,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி.! இந்திய அணி தோல்விக்கு காரணம் என்ன.?

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி.! இந்திய அணி தோல்விக்கு காரணம் என்ன.?

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும்…

13 minutes ago

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

10 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

11 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

12 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

12 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

13 hours ago