330 மில்லியன் டாலரை இழந்த நேபாள சுற்றுலாத்துறை.!

Published by
murugan

நேபாளத்தின் சுற்றுலாத்துறைக்கு  330 மில்லியனுக்கும் அதிகமான  டாலரை இழப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த இழப்பு ஜூலை 21 வரை 332 மில்லியன் டாலரை  கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேபாள சுற்றுலா வாரியம் மற்றும் நேபாளத்தின் சிவில் ஏவியேஷன் ஆணையம் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு குழு, ஹோட்டல், பயணங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற துறையில் கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது  ஒவ்வொரு மாதமும் 83 மில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளதாக அந்த குழு கூறியது.

நேபாளில் கடந்த ஜூன் 10-ம் தேதி முதல் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது. பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் செயல்பட அனுமதித்தாலும், சுற்றுலாத் துறை, குறிப்பாக ஹோட்டல் மற்றும் விமானத்துறைகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படவில்லை.

உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை ஜூலை 21-ஆம் தேதி வரை தொடர்ந்து நிறுத்தி வைக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது. சுற்றுலாத்துறை பெரும் இழப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், நேபாள சுற்றுலா தொழில்முனைவோர் குழு நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் யோகேஷிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர்.

அதில், சில சுகாதார நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் திட்டமிடப்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை இயக்க விமானங்களை அனுமதிக்குமாறு சுற்றுலா தொழில் முனைவோர் அரசிடம் கேட்டுக் கொண்டனர்.

மேலும், சுற்றுலா வாகனங்களை இயக்க நேபாளி அரசு அனுமதிக்க வேண்டும், மலைகளில் இருந்து குப்பைகளை அகற்ற வேண்டும், சுற்றுலா தலங்களில் உள்கட்டமைப்பு மேம்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் சுற்றுலா தொழில் முனைவோர் கோரிக்கை வைத்தனர்.

நேபாளில் இதுவரை கொரோனாவால் 15,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

6 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

6 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

7 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

7 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

9 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

9 hours ago