கட்சி விவகாரம் தொடர்பாக பதில் சொல்ல நேரமில்லை என விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளார்.
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விஜய் அவர்களின் தந்தையும் பிரபல இயக்குநருமாகிய எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் அண்மையில் விஜய் மக்கள் இயக்கம் எனும் பெயரில் அரசியல் கட்சி துவங்கியுள்ளதாக சலசலப்புகள் ஏற்பட்டது. இந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும், இந்த கட்சியில் தனது ரசிகர்கள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டாம் எனவும், கட்சியில் தனது புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் அவ்வாறு செய்தால் நடவடிக்கை எடுப்பேன் எனவும் விஜய் அண்மையில் கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று மதியம் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள், விஜய் பெயரில் 1993 ல் துவங்கிய நற்பணிமன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டிய தேவை தனக்கு இருந்ததால் தான் அவ்வாறு செய்ததாகவும், அதற்கும் விஜய்க்கும் சம்மந்தமில்லை என கூறுவது அவரது கருத்து அதற்காக எங்களது உறவில் விரிசல் ஏற்பட்டு விட்டது என நீங்கள் நினைத்தால் அது உங்களின் கற்பனை. தற்பொழுது நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க எனக்கு நேரமில்லை, வேண்டுமானால் நான் கட்சி ஆரம்பித்ததற்கான காரணத்தை தனித்தனியாக வந்து கேளுங்கள் கூறுகிறேன், இப்போது சொல்ல முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…