US Election 2020 LIVE : நம் ஜனநாயகத்தை யாரும் பறிக்கவும் முடியாது,நாங்கள் சரணடையவும் மாட்டோம் – ஜோ பைடன்

Published by
Castro Murugan

உலகமே உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு  விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது ,தற்போதைய நிலவரப்படி, ஜோ பைடன் 264 சபை ஓட்டுகளையும் ,டொனால்ட் ட்ரம்ப் 214 ஓட்டுகளையும் பெற்றுள்ளார் .இன்னும் வெற்றி பெற 6 இடங்கள் தேவைப்படுவதால், ஜோ பைடன் அடுத்த அமெரிக்கா அதிபராவது உறுதிசெய்யப்பட்டுவிட்டது .

இந்நிலையில் ஜோ பைடன் டெலாவேர் மாநிலத்தில் தனது கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்,அப்பொழுது அவர் ​​நீண்ட எண்ணிக்கையிலான எண்ணிக்கையின் பின்னர், ஜனாதிபதி பதவியை வெல்வதற்குத் தேவையான 270 தேர்தல் வாக்குகளை எட்டுவதற்கு போதுமான மாநிலங்களை நாங்கள் வென்று கொண்டிருக்கிறோம் என்பது தெளிவாகிறது.

நாம் வெற்றிபெற்றுவிட்டோம் என்பதை அறிவிக்க இங்கு வரவில்லை, ஆனால் எண்ணிக்கை முடிந்ததும் நாம் வெற்றியாளர்களாக இருப்போம் என்று நாங்கள் நம்புகிறோம்” இப்போது, ​​ஒவ்வொரு வாக்குகளும் எண்ணப்பட வேண்டும்.அதுவரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும் என்று ஜோ பைடன் கூறினார் .

மேலும் அவர் கூறுகையில்,யாரும் நம் ஜனநாயகத்தை எங்களிடமிருந்து பறிக்கப் போவதில்லை, இப்போது இல்லை, எப்போதும் இல்லை. அமெரிக்கா வெகுதூரம் வந்துவிட்டது, அமெரிக்கா பல போர்களை நடத்தியுள்ளது, அது நடக்க விடாமல் அமெரிக்கா மிக அதிகமாக சகித்துள்ளது என்று கூறினார் .

வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருக்கும் பொழுது டிரம்ப் தனது வெற்றி பறிபோய்விடுமோ என்று பயந்து ,ட்விட்டர் முதல் செய்தியாளர் சந்திப்பில் தனது எதிர்ப்பு குரல்களை பதிவு செய்தார்.அதன் உச்சகட்டமாக வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாகவும் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லப்போவதாக அறிவித்தார் அதன் பின்னர் வாக்கு எண்ணிக்கையில் சற்று தொய்வு ஏற்பட்டது .

இதை கருத்தில் கொண்டு பேசியுள்ள ஜோ பைடன் மக்களாகிய நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்,எங்களை யாரும் கொடுமைப்படுத்தவும்  முடியாது ,சரணடையவும் மாட்டோம் .”எனக்கு நம்பிக்கை உள்ளது, நாங்கள் வெற்றிகரமாக வெளிப்படுவோம்.”என்று தனது டிரம்ப் க்கு எதிரான குரலை உயர்த்தி கூறினார் .

ஜோ பைடன்  70 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார் , இது அமெரிக்க வரலாற்றில் வேறு எந்த ஜனாதிபதி வேட்பாளரும் பெற்றிடாத வாக்குகளாகும் .

live :அமெரிக்க தேர்தல் முடிவுகள் பற்றி தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் தினச்சுவடு தமிழுடன் .

 

Published by
Castro Murugan

Recent Posts

“அந்த மனசு தான் சார் கடவுள்”… முத்துக்குமார் குடும்பத்திற்கு பெரிய உதவிய செய்த சிவகார்த்திகேயன்!

“அந்த மனசு தான் சார் கடவுள்”… முத்துக்குமார் குடும்பத்திற்கு பெரிய உதவிய செய்த சிவகார்த்திகேயன்!

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது நடிப்பில்…

12 hours ago

பாமகவிலிருந்து 3 எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்! என்ன காரணம்?

சென்னை : பாமக (பாட்டாளி மக்கள் கட்சி) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி,…

14 hours ago

பசிபிக் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

ஹவாய் : ஜூலை 20 அன்று, வடக்கு பசிபிக் கடல் பகுதியில் ரிக்டர் அளவில் 7.4 என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

14 hours ago

மீண்டும் மீண்டுமா? இரண்டாவது முறையாக கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

அமெரிக்கா : தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம் செஸ் வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் செஸ்…

15 hours ago

இனிமே இதில் ChatGPT போன்ற AI பயன்படுத்தக் கூடாது! கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்க்கவோ அல்லது தயாரிக்கவோ ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகளைப் பயன்படுத்தக் கூடாது…

16 hours ago

“ஒட்டு கேட்கும் கருவி விவகாரத்தில் சந்தேகம்” – பாமக நிறுவனர் ராமதாஸ்

விழுப்புரம் : மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக…

17 hours ago