சீன அதிபருக்கு பாராட்டு தெரிவித்த வடகொரிய அதிபர்.!

Published by
பாலா கலியமூர்த்தி

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங்கைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பாராட்டியுள்ளார். 

சீனா உஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் சுமார் 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், அமெரிக்கா, ஐரேப்பிய நாடுகளில் கோரத்தாண்டம் ஆடி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 39,48,089 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 2,71,725 ஆகவும் உள்ளது. மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,58,286 ஆக அதிகரித்துள்ளது. 

இதனிடையே சீனாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 82,886 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 4,633 ஆகவும் உள்ளது. மேலும் சீனாவில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் சுமார் 70 நாட்களுக்கு பிறகு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்திருந்தது. ஊரடங்கு தளர்வால் அந்நாட்டில் இயல்பு வாழ்கை திரும்பியுள்ளது. இந்த நிலையில், வடகொரிய அதிபர் கிம் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங்கைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பாராட்டியுள்ளார். 

இதுகுறித்து அந்நாட்டு ஊடங்கங்கள் வெளியிட்டுள்ள தகவலில்,  கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற சீனாவுக்கு வடகொரிய அதிபர் கிம் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் கிம் உடல் நலம் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் விசாரித்துள்ளார் என்று கூறியுள்ளது. வடகொரியா அதிபர் கிம் உடல்நலம் குறைவால் நீண்ட நாட்களுக்கு பின்தான் பொதுநிகழ்ச்சியில் பங்கேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…

12 hours ago

இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?

ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…

13 hours ago

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…

13 hours ago

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

14 hours ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

15 hours ago

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

15 hours ago