தென் ஆப்பிரிக்காவில் சில வௌவால்களிடம் ‘நியோகோவ்’ எனும் வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த வைரசும் அதன் மற்றொரு பிரிவான பிடிஎஃப்-2180 கோவ் ஆகியவையும் மனிதர்களை பாதிக்கக் கூடும் என சீன ஆய்வாளர்கள் புதிய ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த இரண்டு வருடமாக தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தற்போது தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வைரஸ் பல இடங்களில் பரவி வருகிறது.
அதே சமயம் தென் ஆப்பிரிக்காவில் சில வௌவால்களிடம் ‘நியோகோவ்’ எனும் வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ்கள் புது வகை வைரஸ்கள் அல்ல. இது விலங்குகளிடம் பரவக்கூடியவை. ஆனால் இந்த வைரசும் அதன் மற்றொரு பிரிவான பிடிஎஃப்-2180 கோவ் ஆகியவையும் மனிதர்களை பாதிக்கக் கூடும் என சீன ஆய்வாளர்கள் புதிய ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில, இந்த வைரஸ் கொலைகார வைரஸ். வேகமாக பரவி கூடியது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால் மூன்றில் ஒருவர் உயிரிழக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர். இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில் நியோகோவ் பற்றி இப்போது கவலைப்படத் தேவையில்லை. இந்த வைரஸ் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்குமா என்று இன்னும் ஆய்வு செய்ய வேண்டி இருப்பதாக தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…