எனது முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடக்க வேண்டும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் அமெரிக்காவில் அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள ட்ரம்ப் மற்றும் அவருடைய பரப்புரை குழுவினர் மூன்று மாநிலங்களில் வழக்கை தொடர்ந்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவு பெற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இதுவரை நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில், ஜோ பைடனே முன்னிலையில் உள்ளார். அவர் 70 மில்லியனுக்கு அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார்.
அலாஸ்கா. பென்சில்வேனியா, மிச்சிகன், மிஸ்கன்சான், ஜார்ஜியா, நெவேடாவில் இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடேன் 264 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். அவர் வெற்றி பெற்றுள்ளார். அவர் வெற்றி பெறுவதற்கு இன்னும் 6 வாக்குகளே தேவையாக உள்ளது.
நிவானா மாநிலத்தில் உள்ள மொத்தம் 6 வாக்குகளை பைடன் கைப்பாற்றினால், 270 என்ற மேஜிக் என்ணை பைடன் அடையாளம். ஆனால் முடிவுகள் அறிவிக்கப்படாத 6 மாநிலங்களில் உள்ள மொத்தம் உள்ள 60 வாக்குகளை பெற்றால் தன, அதிபர் ட்ரம்ப் வெற்றி பெற முடியும்.
இதனிடையே, வாக்கு எண்ணிக்கையில், மோசடி நடப்பதாக ட்ரம்ப் 3 மாநிலங்களில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் தனது மேற்பார்வையில் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். முடிவுகள் அறிவிக்கப்பட்டு, எதிர்வேட்பாளர் வெற்றியை ஏற்றுக் கொண்டால் மட்டுமே வெற்றியை அறிவிக்க முடியும் என்ற விதி அமெரிக்காவில் உள்ளது.
அதன்படி, தோல்வியடைந்தவர் ஆட்சேபம் தெரிவிக்கும் பட்சத்தில், வழக்கு தொடரவும் உரிமை உண்டு. இதற்கு முன்னதாக, இதுகுறித்து ஜனநாயக கட்சியின் வழக்கறிஞரும், வெள்ளை மாளிகையின் முன்னாள் சட்ட ஆலோசகருமான பாப் பவுயெர்,’வாக்கு எண்ணிக்கை நாளில் எண்ணப்பட்ட வாக்குகளை தகுதி நீக்க செய்ய கோரி உச்சநீதிமன்றத்துக்கு போனால், ஒரு அதிபராக டொனால்ட் ட்ரம்ப் மிகவும் அசிங்கப்பட்டு தோல்வியடைவார்.’ என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
live :அமெரிக்க தேர்தல் முடிவுகள் பற்றி தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் தினச்சுவடு தமிழுடன் .
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரரும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.முத்து (வயது 77)…
சென்னை : முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (வயது 76) உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள…
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில், கடந்த சனிக்கிழமை (12.07.2025) 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி…
தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே உள்ள சேதுக்குவாய்த்தான் பகுதியில் நேற்று (ஜூலை 18) மாலை இரண்டு பள்ளி வாகனங்கள் நேருக்கு…
சென்னை : முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான மு.க.முத்து, வயது மூப்பின் காரணமாக சென்னையில்…
அங்காரா: இஸ்ரேல் - சிரியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக துருக்கிக்கான அமெரிக்க தூதர் டாம் பராக் அறிவித்துள்ளார்.…