இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் செஞ்சி ராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருதினை அறிவித்துள்ளது.அதன்படி 2019ஆம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அதே போல் 2019ஆம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் விருது முனைவர் க.அருச்சுனனுக்கு அறித்துள்ளது. அம்பேத்கர் விருதுடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை மற்றும் பொற்கிழியும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்சமயத்தில் தான் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் பெரியார் விருது யாருக்கு என்பது அறிவிக்கப் படவில்லை.கடந்த ஆண்டு முன்,சொந்தக்கட்சியைச் சேர்ந்தவருக்கு வழங்கியதைப் போல இந்தாண்டு வழங்க ஆள் இல்லையா..?அல்லது டெல்லி எஜமானர்களின் மனங்களை குளிர்விப்பதற்காக தவிர்க்கப்பட்டுள்ளதா.? என்று தனது ட்விட்டர் பதிவில் கேள்வி எழுப்பி விமர்சித்து இருந்த நிலையில் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது,
ஜனவரி 13ஆம் தேதி பெரியார் விருது அறிவிக்கப்படாதது பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில் ஜனவரி 9ம் தேதி பெரியார், மற்றும் 10 ந் தேதி அம்பேத்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு அதற்காக அரசு தரப்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…