துருக்கி நாட்டில் சிறிய ரக விமானம் மோதி விபத்துகுள்ளானதில், விமானிகள் உட்பட 7 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.
துருக்கி நாட்டில் காவல் துறையினருக்கு சொந்தமான ஒரு சிறிய ரக விமானம், கண்காணிப்பு பணியை மேற்கொண்டது. அப்பொழுது கிழக்கு துருக்கியில் உள்ள ஆர்டோஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
அவர்கள், வான் மற்றும் அண்டை மாகாணமான ஹக்கரி மீது கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு, விமான நிலையத்திற்கு திரும்பும் வழியில் விமானம் ரேடாரில் இருந்து மறைந்த தாகவும் அவர் தெரிவித்தார்.
அந்நாட்டு நேரப்படி, அதிகாலை 3 மணியளவில் விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார் . அந்த விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகள் உட்பட அனைவரும் தேசிய காவல் துறையில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் சோய்லு தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…