அடுத்த 20 ஆண்டுகளில் கடலில் பிளாஸ்டிக் கழிவு 3 மடங்கு உயரும்!

Published by
Rebekal

அரசும் தனியார் நிறுவனங்களும் பிளாஸ்டிக் உற்பத்தியை குறைக்காவிட்டால் அடுத்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரிக்கும் என ஆய்வு முடிவுகள் எச்சரித்துள்ளது.

ஏற்கனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க முடியாமல் உலகமே திணறி வருகிறது. இந்நிலையில், அரசு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் பிளாஸ்டிக் உற்பத்தியை குறைக்க முயலாவிட்டால் அடுத்த 20 ஆண்டுகளில் கடலில் கலக்க கூடிய பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று ஆய்வு முடிவுகள் எச்சரித்துள்ளது.

கொரோனா தொற்றால் முகக் கவசங்கள், கையுறைகள், ஆன்லைன் வணிகத்திற்காக பேக்கிங் கவர்கள் பயன்பாட்டால் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தற்போதைய காலத்தில் அதிகரித்துள்ளதாக சர்வதேச திடகழிவு சங்கத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதே நிலை நீடித்துக் கொண்டு சென்றால் 2040 ஆம் ஆண்டில் கடலில் கலக்கக்கூடிய பிளாஸ்டிக் அளவு 600 மில்லியன் டன்னாக பெருகும் என்றும், இது 30 லட்சம் நீலத் திமிங்கலங்களின் எடைக்கு சமம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தடுக்க பிளாஸ்டிக் கழிவுகளை 80% வரை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

29 minutes ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago