விஷாலுடன் மூன்றாவது முறையாக நடிகர் பிரபு இணைந்து நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னை நடிகராக வலம் வரும் விஷால் தற்போது து.ப.சரவணன் என்பவரது இயக்கத்தில் வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்திற்கான டப்பிங் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனது 32-வது படத்தில் விஷால் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறு விறுவென நடந்து வருகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அசோக் என்பவர் இயக்குகிறார். நடிகர்கள் ரமணா, நந்தா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைக்கிறார்.
இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடிக்கிறார். சமர் படத்தை தொடர்ந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு விஷாளுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது இந்த படத்தில் நடிகர் பிரபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார். இதற்கு முன்பு விஷாலுடன் தாமிரபரணி, ஆம்பள ஆகிய படங்களில் பிரபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…