மருந்து கண்டறிதலுக்கே முன்னுரிமை தர வேண்டும்- கவியரசு வைரமுத்து..!

Default Image

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பலர் முயற்சித்து வருகின்றனர். இதனிடையே அமெரிக்கா ஆய்வாளர்கள் கொரோனா வைரஸை சீனா செயற்கையாக உருவாக்கியது என்று குற்றம் சாட்டி வந்த நிலையில் உலக சுகாதார மையமோ கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது என்று அறிவித்துள்ளனர். மேலும் பல கோடிகள் செலவு செய்து கொரோனா தொற்றுக்கான தடுப்பு ஊசிகளையும், மருந்துகளையும் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர் மருத்துவர்கள். 

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கவிதை வடிவில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது கொரோனா வைரஸ் இயற்கையாக தோன்றியதோ, செயற்கையாக தோன்றியதோ என்பதை ஆராய்வதை விட்டுவிட்டு உலகநாடுகள் அனைத்தும் கொரோனா தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கவிதைபாணியில் இதோ, 

கொரோனா நச்சுயிரி மனித முயற்சியா இயற்கை நிகழ்ச்சியா என்பதில் கருத்து வேறுபாடுண்டு. ஆனால், மருந்து கண்டறிதல் மனித முயற்சிதான் என்பதில் மாறுபாடில்லை. உலக நாடுகள் முன்னதை விட பின்னதற்கே முன்னுரிமை தரவேண்டுமென்பது பேருலகின் பெருவிருப்பம் என்று பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்