சீன ஆப்களுக்கு தடை.! பப்ஜி விளையாட்டுக்கு ஏன் இந்தியாவில் தடை இல்லை.?

Published by
மணிகண்டன்

பப்ஜி விளையாட்டு தென் கொரிய கம்பெனி மூலம் உருவாக்கப்பட்டதால் இந்தியாவில் தடை செய்யப்படவில்லை.

இந்திய-சீன எல்லை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தபிறகு, சீன நிறுவனங்களின் மொபைல் ஆப்களான டிக் டாக், ஹலோ,  யூசி பிரௌசர் போன்ற 59 மொபைல் ஆப்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் பொது ஒழுங்கை பாதிக்கும்படியாக இந்த ஆப்கள் இருப்பதால் இதனை தடை செய்வதாக அரசு சார்பில் விளக்கம் தரப்பட்டது.

ஆனால், பப்ஜி மற்றும் கால் ஆஃ டியூடி ஆகிய மொபைல் ஆப்கள் மட்டும் ஏன் இந்தியாவில் தடைசெய்யப்படவில்லை என பல்வேறு தரப்பில் இருந்து கேள்விகள் எழுந்தன.

அதற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதாவது, பப்ஜி சீனாவை சேர்ந்தது அல்ல. பப்ஜி விளையாட்டானது, உருவாக்கப்பட்டது தென்கொரியாவில் உள்ள  ப்ளுஹோல் நிறுவனத்தின் துணை நிறுவனமான பப்ஜி கார்ப்பரேஷன்  நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் டென்சென்ட் கேம்ஸ் நிறுவனம் மூலமாக  சீனாவில் பப்ஜி விளையாட்டு கொண்டுவரப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகே, பப்ஜி  விளையாட்டு சீனாவில் இருந்து இந்தியா வந்தடைந்தது.

அதேபோல டென்ஷன் நிறுவனத்தின் துணை நிறுவனமான டிமி ஸ்டூடியோஸ் உடன் கூட்டு சேர்ந்து கால் ஆஃப் டியூட்டி மொபைல் ஆப்  தொடங்கப்பட்டது. இந்த நிறுவனமான கலிபோர்னியாவை சேர்ந்தது ஆகும்.  பப்ஜி, கால் ஆஃப் டியூட்டி ஆகிய இவ்விரண்டு ஆப்களும் இந்தியாவில் தடை செய்யப்படவில்லை என செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

2 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

3 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

5 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

5 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

6 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

6 hours ago