வரலாற்றில் இன்று(21.05.2020)… முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட தினம் இன்று…

Published by
Kaliraj

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் தற்கொலைப்படை தாக்குதலால் குண்டு வைத்து கொல்லப்பட்ட தினம் வரலாற்றில் இன்று.

இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் அதிகாரமிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்தும் அரசியல் மீது ஆர்வமில்லாமல், விமான ஓட்டியாக  தனது வாழ்வை நிகழ்த்திய  ராஜீவ் காந்தி  தன் தம்பியான சஞ்சய் காந்தி இறந்த பின், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி இந்திய அரசியலுக்கு வந்தார். 1981 பிப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப்பிரதேசத்திலுள்ள அமேதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இலங்கையில் நடைபெற்று வந்த உள்நாட்டு போரில் சிங்களர்கள் மற்றும் விடுதலை புலிகளுக்கிடையேயான போர் நிறுத்தத்திற்காக இந்திய அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பி, தமிழர்களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையைப் பெற்றுத் தர முயன்றார். ஆனால்,  1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி, இதே நாளில் ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டுமூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

ராஜீவ் படுகொலை: 'உங்களையும் ...

ராஜீவ் காந்தியின் படுகொலை விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது என்பது தெரியவந்தது.  பின்னர், அவரது உண்மையான பெயர் காயத்ரி என்று கண்டறியப்பட்டது.  அந்த நிகழ்வானது, அன்று  காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் மாலை அணுவித்தனர். சரியாக 22:21 மணிக்கு கொலையாளி தானு, அவரை அணுகி வாழ்த்தினாள். அவள் அவரது கால்களை தொட கீழே குனியும்போது அவளது ஆடையின் அடியே வைத்திருந்த ஆர் டி எக்ஸ் வெடிபொருளை வெடிக்கச் செய்தாள். இதில், ராஜீவ் காந்தி மற்றும்  அவருடன் 14 பேரும்  அந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் அங்கிருந்த ஒரு புகைப்படக்காரரின் புகைப்பட கருவியில் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் தற்கொலைப்படை தாக்குதலால் குண்டு வைத்து கொல்லப்பட்ட தினம் வரலாற்றில் இன்று.

Published by
Kaliraj

Recent Posts

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

20 minutes ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

59 minutes ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

3 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

4 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

4 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

5 hours ago