உருகுவேவில் ரூ.7,000 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்.!

Published by
murugan
  • உருகுவேவில் 4.4 டன் எடை கொண்ட கொகைன் போதைப்பொருள் கடற்படை , சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
  • 4.4 டன் எடை கொண்ட கொகைன் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.7,000 கோடி என தகவல்.

உருகுவே நாட்டில் அதிகமாக போதைப்பொருள் கடத்தப்படுகிறது. இதை தடுக்க அந்த நாட்டின் கடற்படை அதிகாரிகளும், சுங்க அதிகாரிகளும் துறைமுக நகரான மொண்டே வீடியோ நகரில் உள்ள துறைமுகத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது சோதனையில் ஈடுபட்டபோது அதிகாரிகள் சோயா மாவு டப்பாக்களை திறந்து பார்த்தபோது  அதில் 4.4 டன் எடை கொண்ட கொகைன் போதைப்பொருள் இருந்தது  தெரிய வந்தது.

இந்த 4.4 டன் எடை கொண்ட கொகைன் போதைப்பொருள்களை மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள லோமுக்கு கடத்த முயற்சி செய்து உள்ளனர்.பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு சுமார் 1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.7,000 கோடி) என தகவல்கள் வெளியாகி உள்ளது.

போதைப்பொருள்களை ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்துவதற்கு உருகுவே நாட்டை தான் மையமாக பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த நவம்பர் மாதம் இதே மொண்டேவீடியோ நகரில் 3 டன் கொகைன் போதைப்பொருள்  பறிமுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

4 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

4 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

4 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

6 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

6 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

8 hours ago