இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இந்தியாவில்… பங்கேற்க்குமா? பாகிஸ்தான்… வருவாரா? இம்ரான் கான்..

Default Image
  • இந்த ஆண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இந்தியாவில் நடைபெருகிறது.
  • இதில் பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பாரா இல்லை புறக்கணிப்பா?.

இந்த ஆண்டின் 19வது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான்,சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.இந்தாண்டுக்கான  இந்த அமைப்பின் 19-வது மாநாடு இந்தியாவில் நடக்கிறது. இதில் பங்கேற்குமாறு பாகிஸ்தான்  அரசிற்கும் அழைப்பு விடுக்கப்படலாம் என தெரிகிறது.

Image result for s.c.o

இதில், இந்தியா சார்பில் எஸ்.சி.ஓ. அமைப்பின்படி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கடிதம் வாயிலாக அழைப்பு விடுக்கப்படும் என்றும், இந்த  இந்தியாவின் அழைப்பை இம்ரான் கான்  ஏற்பாரா? அல்லது பாகிஸ்தான் பிரதமர் சார்பில் பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைப்பாரா ? மாநாடு நடக்கும் போது தான்  தெரியவரும். ஜம்மு காஷ்மீர் மாநிலம்  இரண்டாக பிரிக்கப்பட்டு இரு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இதன் பின்னர் இந்தியாவை தொடர்ந்து இம்ரான் கான்  விமர்சித்து வந்த நிலையில் கூடிய விரைவில் பாகிஸ்தானின் நிலைப்பாடு விரைவில் தெரியவரும் என்று அரசியல்  வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai