பிரேம்ஜி மற்றும் ரேஷ்மா பசுபதி நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் போஸ்ட்ரை மாதவன் அவர்கள் வெளியிட்டுள்ளார்
கடந்த 2017ம் ஆண்டு ‘ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற படத்தை இயக்கி பிரபலமானவர் இயக்குநர் சுரேஷ் சங்கையா. இந்த படம் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பல விருதுகளையும் அள்ளி குவித்தது. தற்போது இவர் தனது அடுத்த படத்தினை குறித்த டைட்டிலை வெளியிட்டுள்ளார். ‘சத்திய சோதனை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலமான ரேஷ்மா பசுபதி நடிக்கவுள்ளார்.
சத்திய சோதனை என்பது தேசதந்தை மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை குறிப்பிடும் நூலாகும். இந்த டைட்டிலுடன் உருவாகும் இந்த படமும் நகைச்சுவையுடன் நல்ல சமூக கருத்துக்களையும் கூறும் படமாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். டைட்டிலுடன் கூடிய போஸ்ட்ரை நடிகர் மாதவன் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…