#Shocking:பெட்ரோல் விலை ரூ.84 அதிகரிப்பு – ஒரு லிட்டர் விலை எவ்வளவு தெரியுமா?..!

Published by
Edison

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில்,உணவு,எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன.இதனால்,மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்த இக்கட்டான நிலைக்கு அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்சே தான் காரணம் என்றும்,அவர் பதவி விலக வேண்டும் என்றும் இலங்கையில் பெரும் போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு லங்கா ஐஓசி (எல்ஐஓசி) எரிபொருள் விலையை உயர்த்தியதை அடுத்து, பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை அதிகரிக்க அரசு நிறுவனமான இலங்கை பெட்ரோலியக் கூட்டு ஸ்தாபனமும் (CPC) முடிவு செய்தது.

அதன்படி,எரிபொருள் விலைகள் 92 ஆக்டேன் பெட்ரோல் விலை லிட்டருக்கு 84 ரூபாயும்,95 ஆக்டேன் பெட்ரோல் லிட்டருக்கு 90 ரூபாயும், சூப்பர் டீசல் லிட்டருக்கு ரூ.75 மற்றும் ஆட்டோ டீசல் லிட்டருக்கு 113 ரூபாயும் உயர்த்தியுள்ளன.

இதன்படி,92 ஆக்டேன் பெட்ரோலின் புதிய விலை லிட்டருக்கு 338 ரூபாயாகும்.அதைப்போல,95 ஆக்டேன் பெட்ரோலின் விலை லிட்டர் 373 ரூபாய் ஆகும்,ஒரு லிட்டர் சுப்பர் டீசல் 329 ரூபாயாகவும், ஒரு லிட்டர் ஆட்டோ டீசல் 289 ரூபாயாகவும் விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில்,இந்த நடைமுறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே,கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு மேலும் அதிக பாரத்தை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.

ஆக்டேன் பெட்ரோல்:

அதிக ஆக்டேன் எண் கொண்ட பெட்ரோல், அதிக சுருக்க விகிதங்கள்(compression ratios) கொண்டவை,இதனால் டர்போசார்ஜிங் உள்ளிட்டவற்றை சிறப்பாக செயல்படுத்துகிறது.மேலும்,இவை அனைத்தும் அதிக இயந்திர செயல்திறன் மற்றும் அதிக செயல்திறனை(engine efficiencies and higher performance) செயல்படுத்துகின்றன.

Recent Posts

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

3 minutes ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

35 minutes ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

37 minutes ago

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

1 hour ago

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…

3 hours ago