சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கவுள்ளதாக வெளியான தகவல்கள் வதந்தி என்று மனோஜ் விளக்கமளித்துள்ளார்.
பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’. இளையராஜா இசையமைத்த திரில்லர் கலந்த இந்த படம் அந்த காலத்திலையே அனைவரையும் மிரள வைத்து பெரும் வெற்றியை பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியானது.
ஆம் சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தை பாரதிராஜாவின் மகனான மனோஜ் இயக்கவுள்ளதாகவும், கமல் நடித்த கதாபாத்திரத்தில் சிம்பு அவர்களை நடிக்க வைக்க உள்ளதாகவும்,கீர்த்தி சுரேஷை நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது. தற்போது இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பாரதிராஜாவின் மகனும் , நடிகருமான மனோஜ் விளக்கமளித்துள்ளார்.
அதில் சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் சிகப்பு ரோஜாக்கள் – 2 குறித்து வெளியாகியுள்ள செய்திகள் அனைத்தும் வதந்தி என்றும், ஒருவேளை படத்தை இயக்குவது குறித்து யோசித்தால் கண்டிப்பாக நானும், எனது அப்பாவும் இணைந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்றும் கூறியுள்ளார். இதிலிருந்து சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாக வெளியான தகவல்கள் வதந்தி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…