வைரஸ் பாதிக்கப்பட்ட பெண்ணால் சீனா பயணிகளுக்கு வருகை விசா ரத்து -இலங்கை அறிவிப்பு.!

Default Image
  • கடந்த 25-ம் இலங்கை விமான நிலையத்தில் சீனா பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
  • இதனால் சீனப்பயணிகளுக்கு விசா வழங்க ரத்து செய்ய இலங்கை சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 19-ம் தேதி சீனாவில் இருந்து இலங்கை வந்த 40 வயது மதிப்புத்தக்க பெண் ஒருவர் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்து உள்ளார்.இந்நிலையில் அப்பெண் மீண்டும் சீனாவிற்கு திரும்ப கடந்த 25-ம் இலங்கை விமான நிலையம் வந்து உள்ளார்.

அப்போது அவருக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சீனப்பயணிகளுக்கு விசா வழங்க ரத்து செய்ய இலங்கை சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் “கொரனா வைரஸ்” காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் முதலில் அந்நாட்டில் உள்ள வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் போன்ற நகரங்களிலும் பரவி உள்ளது.

இன்று காலை நிலவரப்படி பலியானோரின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. சீனா முழுவதும் 1300 பேருக்கு மேல் இந்த கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05052025
Kahmir person jumped into river and died
DMK MP A Rasa stage collapse
NEET exam 2025
India Pakistan - Postal Services