பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் இந்தி நடிகைகளை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது ஸ்ருதிஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் பிரசாந்த் அவர்களின் இயக்கத்தில் சலார் எனும் பிரம்மாண்ட திரைப்படம் தற்போது உருவாக உள்ளது. இந்த படத்திற்கான பூஜை கடந்த வாரம் தான் நடைபெற்ற நிலையில், தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வரக்கூடிய தெலுங்கு நடிகர் பிரபாஸ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். தொடர்ச்சியாக பல படங்களில் நடிக்க கூடிய பிரபாஸ் சலார் படத்திலும் அட்டகாசமான கதாநாயகன் ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் இவருக்கு ஜோடியாக இந்தப் படத்தில் இந்தி திரையுலகை சேர்ந்த நடிகைகைகள் ஒருவரை தான் நடிக்க வைக்க வேண்டும் என்று பலரிடம் பேசப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது ஹிந்தி நடிகைகளுக்கான வாய்ப்பை தமிழ் நடிகை ஸ்ருதிஹாசன் பெற்றுள்ளார்.
சமீபத்தில் தெலுங்கு திரை உலகில் வெளியாகிய கிராக் எனும் ஸ்ருதிஹாசனின் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, சலார் படத்திலும் ஸ்ருதி ஹாசனை நடிக்க வைக்கலாம் என தற்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில்இவர் நடித்தால் இதுதான் பிரபாஸுடன் அவர் நடிக்கும் முதல் படமாக இருக்கும். ஏற்கனவே தெலுங்கு திரை உலகில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள ஸ்ருதிகாசன், இந்த படத்தின் மூலம் மேலும் தெலுங்கு திரை உலகில் ஆழமாக கால் பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…