23 பேர் உயிரிழப்பு.! பாகிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்.!

Published by
மணிகண்டன்

2021இல் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் அவ்வப்போது பிரச்சனைகள், தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 80 சதவீதம் அளவுக்கு தாக்குதல்கள் அதிகரித்துள்ளது என ஒரு பாகிஸ்தான் அமைப்பு தெரிவித்துள்ளது.

காஷ்மீர் குறித்து முடிவு எடுக்க இந்தியாவுக்கு உரிமை இல்லை.! பாகிஸ்தான் கடும் அதிருப்தி.!

பாகிஸ்தான் – ஆப்கன் எல்லையான  கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் ஒரு பள்ளி கட்டிடத்தில் தற்காலிக ராணுவ முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த முகாமில் இன்று அதிகாலை ஒரு பயங்கரவாத கும்பல் தற்கொலைபடை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அந்த 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.

இந்த தற்கொலை படை தாக்குதலில் 23 பேர் உயிரிழந்ததாகவும் 27 பேர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், உயிரிழப்புக்கள் மேலும் கூடும் என கூறப்படுகிறது. இருந்தும் பாகிஸ்தான் ராணுவ தரப்பில் இருந்து உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

உயிரிழந்தவர்களின் பலர் ராணுவ உடையில் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அவர்கள் அனைவரும் இராணுவ வீரர்களா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தெஹ்ரீக்-இ-ஜிஹாத் பாகிஸ்தான் — பாகிஸ்தான் தலிபானுடன் இணைந்த ஒரு புதிய குழுவானது இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

8 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

8 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

8 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

10 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

10 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago