சுஷாந்த் சிங்கை அவரது நாயின் பெல்ட்டால் கழுத்தை இறுக்கி…. உதவியாளர் அதிர்ச்சி தகவல்!

Published by
Rebekal

அவருடன் 24 மணிநேரமும் இருந்த எனக்கு தெரியும், அவர் தற்கொலை செய்ய வாய்ப்பில்லை. அவரின் சொந்த நாய் பெல்ட்டால் கழுத்தை இறுக்கி தான் கொலை செய்துள்ளார்கள் என சுஷாந்த் சிங்கின் உதவியாளர் அதிர்ச்சியான தகவலை கொடுத்துள்ளார்.

இன்று வரையிலும் மர்மம் தீராத கொலை வழக்குகளில் ஒன்றாக இருப்பது தான் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம். சமூக வலைத்தளங்களில் இது குறித்து சர்ச்சையான கருத்துக்களும் பதிவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பாலிவுட் நடிகராக இருந்தாலும் இந்தியாவிலுள்ள அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் சுஷாந்த் சிங். இவர் தற்கொலை செய்து உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியதும் முழு இந்திய திரையுலகுமே சோகத்தில் ஆழ்ந்தது. ஆனால், இது தற்கொலையா அல்லது கொலையா என இன்னும் கண்டறியப்படவில்லை.

இவரது மரணம் குறித்து பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. இவரது காதலி ரே சக்கரபூர்த்தி மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் உதவியாளரான அன்கிட் ஆச்சார்யா தற்பொழுது சுஷாந்த் சிங்கின் மரணம் கொலை என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவருடன் 24 மணிநேரமும் இருந்த தனக்கு அவர் எப்படி பட்டவர் என்பது நன்றாகவே தெரியும் என கூறிய அவர், சுஷாந்த் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கோழை இல்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும், சுஷாந்த் சடல புகைப்படத்தை தான் அடிக்கடி பார்த்துக்கொண்ட இருப்பதாக கூறிய அவர், சுஷாந்த் வளர்த்த நாயின் பெல்ட்டினை வைத்து தான் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்கள் என கூறியுள்ளார். ஏனென்றால் தற்கொலை செய்துகொண்டவர்கள் கழுத்தில் “U” வடிவ அடையாளம் தான் இருக்கும் ஆனால், சுஷாந்தின் கழுத்தில் “O” வடிவ அடையாளம் உள்ளது எனவும் தெரிவித்த அவர், தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு கண்கள் மற்றும் நாக்கு வெளியில் வந்து இருப்பதுடன் வாயில் நுரை இருக்கும் ஆனால், அது கூட சுஷாந்தின் சடலத்தில் இல்லை என கூறியுள்ளார். இவர் தற்பொழுது கூறியுள்ள இந்த கருத்தால் சுஷாந்தின் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

Live : கத்திரி வெயில் தாக்கம் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

Live : கத்திரி வெயில் தாக்கம் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…

1 hour ago

தீவிரவாதிகளுக்கு உதவிய இளைஞர்? காஷ்மீர் ஆற்றில் குதித்து உயிரிழப்பு! பரபரப்பான வீடியோ இதோ..

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…

2 hours ago

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

3 hours ago

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

4 hours ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

2 days ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

2 days ago