ஆப்கானிஸ்தானில் சிறைச்சாலைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்.
ஆப்கானிஸ்தானின் தலிபான் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற நிலையில், இவர்களை ஒடுக்கும் முயற்சியில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அரசு படைகளும், தலிபான் பயங்கரவாதிகளும், பக்ரீத் பண்டிகையையொட்டி 3 நாட்கள் சண்டை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, இரு தரப்பு அமைதி ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக, ஆப்கான் அரசு, நேற்று நூற்றுக்கும் அதிகமான தலிபான் பயங்கரவாதிகளை சிறையில் இருந்து விடுதலை செய்திருந்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் நஹாங்கர் மாகாணம் ஜலாலாபாத் நகரில் உள்ள சிறைச்சாலை வாசலுக்கு அருகே நேற்று வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றை பயங்கரவாதிகள் வெடிக்கச்செய்தனர். இந்த சம்பவத்தால், சிறைச்சாலையின் சுவர் இடிந்து விழுந்தது.
இதனையடுத்து, பயங்கர ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாதிகள் சிறைச்சாலையில் காவலுக்கு இருந்து பாதுகாப்பு படையினர் மீதும், சிறைக்கைதிகள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 20-க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் மற்றும் சிறைக்கைதிகள் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ்…
சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…