தலைவி பட நடிகையான கங்கனா ரணாவத் ராமர் கோவில் வழக்கை அடிப்படையாக கொண்டு படத்தை இயக்கி தயாரிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவில் நடித்து பிரபலமானவர் கங்கனா ரணாவத். இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம்தூம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனையடுத்து ஹிந்தி பக்கம் சென்று முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது தமிழில் ஏ. எல். விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ என்ற ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இவர் தற்போது ராமர் கோயில் வழக்கை மையமாக கொண்டு உருவாகவுள்ள ‘அபரஜிதா அயோத்யா’ என்ற படத்தினை இயக்கி தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவர் கூறுகையில், முதலில் இந்த படத்தை இயக்க வேண்டும் என்று நான் நினைக்கவே இல்லை, மிகவும் பிஸியாக இருந்ததால் அதனை பற்றி யோசிக்கவில்லை என்றும், இந்த படத்தை நான் தயாரித்து விட்டு வேறொருவரை வைத்து இயக்க நினைத்திருந்தேன். ஆனால் எனது நண்பர்கள் இந்த படத்தை நான் இயக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனக்கும் அது சரியாக தோன்றியதால் இந்த படத்தை நானே இயக்கி தயாரிப்பதாக கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் நான் நடிக்காமல், இயக்குநராக மட்டுமே முழு கவனமும் செலுத்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். இவர் ஏற்கனவே ‘மணிகர்னிகா:தி குயின் ஆஃப் ஜான்சி என்ற ராணி லட்சுமி பாயின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படத்தில் ஜான்சி ராணியாக நடித்து இயக்கியது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…