கொதித்துக் கொண்டிருந்த கோழி சூப்பிற்குள் விழுந்த சமையல்காரர்…! 5 நாட்களுக்கு பின் உயிரிழப்பு…!

Published by
லீனா

ஈராக்கில் கொதித்துக் கொண்டிருந்த கோழி சூப்பிற்குள் விழுந்து சமையல்காரர் உயிரிழப்பு. 

வடக்கு ஈராக் மாவட்டமான ஜாகோவில் உள்ள ஒரு பெரிய திருமண மண்டபத்தில், 25 வயதான சமையல்காரர் இஸா இஸ்மாயில் ஒரு பெரிய விருந்துக்காக உணவு தயார் செய்து கொண்டிருந்துள்ளார். அவர் ஒரு பெரிய பானையில் கோழி சூப்பை தயாரித்துக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அவர் தவறுதலாக கொதித்துக் கொண்டிருந்த கோழி சூப்பிற்குள் விழுந்துள்ளார். இதில் அவர் 70% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 5 நாட்களுக்கு பின் உயிரிழந்துள்ளார்.

இஸ்மாயீலின் தந்தை இதுகுறித்து கூறுகையில், இஸ்மாயில் பல வருட அனுபவமுள்ள பயிற்சி பெற்ற சமையல்காரர் என்று கூறியுள்ளார். மேலும் அவரது உறவினர் கூறுகையில், இஸ்மாயில் சுமார் இரண்டு ஆண்டுகளாக அந்த இடத்தில் பணிபுரிந்து வருவதாகவும், அவருக்கு ஆறு மாத சிறுவன் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

29 minutes ago

உயர்கிறதா ரயில்களின் டிக்கெட் கட்டணம்? இந்திய ரயில்வே எடுத்த முடிவு?

டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…

1 hour ago

நாங்க போர் ஒப்பந்தத்தை மீறி தாக்கவில்லை…இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…

1 hour ago

“பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தாரு”…ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்!

சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…

2 hours ago

போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!

இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…

2 hours ago

போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்த‌த்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!

அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…

2 hours ago