கொரோனா தடுப்பூசி பணக்காரர்களுக்கு மட்டுமில்லாமல் உலக மக்கள் அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்று போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மட்டும் வெவ்வேறு கட்ட பரிசோதனையில் 3 தடுப்பூசிகள் உள்ளது. அதே போன்று பல நாடுகளில் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளிலும்,சோதனை நிலையிலும் உள்ளது. ஆனால் கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்ததாக ரஷ்யா மட்டும் சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்தால் அவை போடுவதில் பணக்காரர்களுக்கு முன்னுரிமை வழங்க கூடாது என்று வாடிகன் தேவாலயத்தின் பொது மக்களிடம் உரையாற்றிய போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். மேலும் கூறிய அவர், கொரோனாவுக்கான தடுப்பூசி ஒரு நாட்டின் தனிச் சொத்தாக மாறினாலும் அது வருத்தப்பட வேண்டிய விஷயங்களாக இருக்கும் என்றும் கூறினார். எனவே பணக்காரர் என்றில்லாமல் கொரோனா தடுப்பூசி உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் உள்ளதாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக முழுவதையும் முழங்கால்களுக்கு அடியில் வைத்துள்ள இந்த கொரோனா வைரஸ் ஏழைகளின் கடினமான சூழ்திலையையும், உலகில் ஆட்சி செய்யும் பெரும் சமத்துவமின்மையையும் வெளிப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…