3 வருடங்களாக என்ன செய்தீர்கள்.! சிவகார்த்திகேயனுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி.!

Published by
பால முருகன்

மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பேசப்பட்ட ரூ.15 கோடியில் ரூ.11 கோடி மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கொடுத்துள்ளதாகவும், மீதமுள்ள ரூ.4 கோடி சம்பள பாக்கியை தர அவருக்கு உத்தரவிடக்கோரியும் நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த மார்ச் மாதம் 29- ஆம் தேதி சென்னையை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

ஞானவேல்ராஜா தரப்பிலிருந்து அடுத்ததாக “மிஸ்டர் லோக்கல்” பணத்தால் எனக்கு 20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனக்கு அந்த கதையை பிடிக்கவில்லை இருந்தாலும் நடிகர் சிவகார்த்திகேயன் கட்டாயத்தால் அந்த படத்தை தயாரித்தேன், உண்மை நிலவரம் இப்படியிருக்க படம் வெளியாகிய சில ஆண்டுகளுக்கு பின் இப்போது வழக்கு தொடர்வது ஏன். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் சிவகார்த்திகேயனுக்கு அபராதம் விதிக்க வேண்டும்” என பதில் மனு கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது சம்பள பாக்கி தொடர்பாக 3 ஆண்டுகளாக வழக்கு தொடராதது ஏன் எனவும், வருமானவரித்துறை வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மற்றோரு மனுதாக்கல் செய்தது என் என சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கை ஏப்ரல் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Recent Posts

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

2 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

3 hours ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

3 hours ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

4 hours ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

5 hours ago

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

12 hours ago