சிகாகோவில் தனிமையில் வசித்து வந்தவரின் பிறந்தநாளுக்கு திடீரென்று கேக் கொடுத்து அசத்திய சிறுமியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் சிகாகோ நகரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் தான்யா என்ற சிறுமி தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். சமீபத்தில் தான்யாவின் பிறந்தநாளை கொண்டாடிய சிறுமி, அனைவருக்கும் இனிப்பு வழங்கியுள்ளார். அப்போது சிறுமியின் பக்கத்துக்கு வீட்டில் தனிமையாக பல வருடங்களாக ஒருவர் வசித்து வருகிறார். அவருக்கும் கேக் கொடுக்க தான்யாவும் அவரது அப்பாவும் சென்றுள்ளனர். அப்போது, அன்பாக வரவேற்ற பக்கத்து வீட்டுக்காரர், நான் தனிமையிலேயே பல வருடங்கள் வாழ்கிறேன். எனக்கு ஆறுதலுக்கு கூட யாரும் இல்லை என்று மனம் உருகி பேசியிருக்கிறார்.
அப்போது, எதார்த்தமாக தனது பிறந்தநாள் தேதியையும் அவர் கூறியுள்ளார். அந்த தேதியை தான்யா ஞாபகம் வைத்து கொண்டு, அவரின் பிறந்த நாள் அன்று அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்துள்ளார். அதேபோல், அவரின் பிறந்தநாளன்று, காலையில் எழுந்து கேக் தயாரிப்பதற்கு தேவையான எல்லா பொருட்களையும் தயார் செய்து வைத்து விட்டு பள்ளிக்கு சென்று விட்டார். மாலையில் பள்ளியிலிருந்து வந்தவுடன், கேக் தயாரித்து எடுத்து கொண்டு பக்கத்துக்கு வீட்டின் காலிங் பெல்லை அடித்துள்ளார்.
கதவை திறந்தவுடன் கேக் உடன் நிற்கும் சிறுமியை பார்த்து ஆனந்த கண்ணீரில் மூழ்கி விட்டார் அந்த பக்கத்துக்கு வீட்டுக்காரர். பிறந்த நாளன்று இன்ப அதிர்ச்சி கொடுத்த அந்த சிறுமியை அன்பால் வாழ்த்தினார். மேலும் இது குறித்து தான்யாவின் அப்பா, என் மகளை நினைத்து நான் மிகவும் பெருமை படுகிறேன் என்று கூறியுள்ளார்.
சிறுமி தான்யா தனிமையில் இருந்தவருக்கு கேக் கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லி : கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவைப் பற்றிய மெட்டாவின் ஃபேஸ்புக் தானியங்கி மொழிபெயர்ப்பு பிழையால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது கால்களில் ஏற்பட்ட வீக்கத்தை அடுத்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில்,…
சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில்…
காசா : கடந்த இரண்டு ஆண்டுகளாக தினமும் சராசரியாக 28 குழந்தைகள் காசாவில் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள்…
சென்னை : தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளரும், நடிகருமான வேலு பிரபாகரன் (வயது 68), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள…