பீட்டர் பவுல் மனைவியான வனிதாவின் நெற்றியில் முத்தமிடும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
கடந்த சனிக்கிழமை வனிதா விஜயகுமார் பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது. நெருங்கிய நண்பர்கள் மற்றும் தனது குழந்தைகளின் முன்னிலையில் திருமணம் நடைப்பெற்றது.
அந்த தருணத்தில் வனிதா மற்றும் பீட்டர் பவுல் ஒருவருக்கொருவர் லிப்லாக் செய்த புகைப்படத்தை நெட்டிசன்கள் பலர் விளாசி வந்தனர். மகளின் முன்னிலையில் இவ்வாறு செய்வது தவறு என்றும், இது போன்ற புகைப்படங்களை மகள்களின் வாழ்க்கையை கருதி வெளியிடாதீர்கள் என்றும் தெரிவித்தனர்.
சமீபத்தில் கூட பீட்டர் பவுலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தன்னை விவகாரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாகவும், அவரை குடிகாரர் என்றும், பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாகவும் குற்றஞ்சாட்டி வந்தார். அதற்கு தனது யூடியூப் சேனல் மூலம் பதிலடியும் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது பீட்டர் பவுல் வனிதாவின் நெற்றியில் முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டு, அதனுடன் மகள்களை பெற்ற அப்பாகளுக்கு தான் தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்தது அல்ல என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு பலர் ஆதரவுகளையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…