தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கும் படத்தின் டைட்டில் குறித்த போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் .விரைவில் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படமான “தளபதி-65” படத்தை முதலில் முருகதாஸ் இயக்க உள்ளதாக கூறப்பட்டது .
ஆனால் அவர் ஒரு சில காரணங்களால் அப்படத்திலிருந்து விலக,தளபதி65 படத்தை இயக்குவதாக பல இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டது .அதில் எஸ்ஜே சூர்யா ,மகிழ் திருமேனி, பேரரசு உள்ளிட்ட பலரின் பெயர்கள் அடிப்பட்டது.அதிலும் இயக்குனர் நெல்சன் அவர்கள் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவதாக கூறப்பட்டிருந்தது.இயக்குநர் நெல்சன் இயக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தளபதி விஜய்யின் 65-வது படத்தில் ஹீரோயினாக தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாகவும் , வில்லனாக பாலிவுட் நடிகரான ஜான் ஆபிரகாம் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது தளபதி 65 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது தளபதி விஜய்யின் அடுத்த படத்தின் டைட்டில் குறித்த போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
“டார்கெட் ராஜா” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போஸ்டரில் நெல்சன் இயக்குவதாகவும், அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது .ஆனால் இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . தளபதி 65 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் 31-ம் தேதி படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இசையமைப்பாளராக அனிருத் பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே தளபதி விஜய்யின் கத்தி மற்றும் மாஸ்டர் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படியென்றால் ரசிகர்களுக்கு டபிள் விருந்து தான் .
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…