அம்மா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ரூல் புக் எதுவும் கிடையாது – நடிகை கனிகா காட்டம்!

Published by
Rebekal

தனது உடை குறித்து எழும் விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ள நடிகை கனிகா அம்மா என்பவர் இப்படித்தான் உடை அணியவேண்டும் இப்படித்தான் இருக்க வேண்டுமென்பதற்கு ரூல் புக் எதுவும் கிடையாது என கூறியுள்ளார்.

மலையாளத் திரையுலகின் பிரபலமான நடிகை கனிகா தமிழில் பைவ் ஸ்டார் ஆட்டோகிராப், வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்நிலையில், இவருக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிவிட்டது. இவருக்கு 10 வயதில் ஒரு மகனும் இருக்கிறார். இந்நிலையில் எப்பொழுதும் தனது உடற்பயிற்சி மற்றும் அழகிய மாடர்ன் உடை அணிந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டவர் கனிகா. இதற்கு சில சமயங்களில் தவறான விமர்சனங்கள் எழுவதையும் அவர் கவனித்துள்ளார். தற்பொழுதும் அரைக்கால் அணித்தவாறுள்ள புகைப்படம் ஒன்றை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு, விமர்சனங்கள் வருவதற்கு முன்பதாகவே அதற்கு பதிலடி கொடுத்து உள்ளார்.

அதாவது நான் அம்மா தான், ஆனால் நான் கட்டையாக உடை அணிய ஆசைப்படுகிறேன். எனது நண்பர்களுடன் வெளியே சுற்ற ஆசைப்படுகிறேன். நான் எனது வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். அதற்காக எனது மகனை நேசிக்கவில்லை என்று அல்ல, நான் என் மகனை மிகவும் நேசிக்கிறேன். எப்படிப்பட்ட பெற்றோராக இருக்க வேண்டும் என்பதற்கு அம்மாவுக்கு ரூல் புக் எதுவும் கிடையாது எனவும், ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு குடும்ப சூழலும் ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை வாய்ந்து இருக்கும். தாய் என்பவள் அவருடைய தோற்றத்தை வைத்து மட்டும் எடைபோட கூடியவள் அல்ல என எதிர்மறை விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் கனிகா.

Published by
Rebekal

Recent Posts

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

14 minutes ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

53 minutes ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

3 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

4 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

4 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

5 hours ago