தளபதி விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான தெறி படத்திலுள்ள பாடல்கள் நிறைந்த ஆல்பம் 300 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. .
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். தற்போது இவர் கைதி பட இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் தான். சமீப காலமாக விஜய் படங்கள் அனைத்தும் பிளாக் பஸ்டர் ஹிட் செய்து வருகிறது. ஆம் படங்கள் மட்டுமில்லாமல் பாடல்களும் தான். தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்திலுள்ள ஆல்பம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் தெறி. ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்த இந்த படத்தில் சமந்தா மற்றும் எமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த நிலையில் தற்போது ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில் வெளியான இந்த படத்திலுள்ள அனைத்து பாடல்களும் நிறைந்த ஆல்பம் யூடுபில் 300 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…