அம்மா இறந்தது தெரியாமல் எழுப்பிய குழந்தை.. கண்களை கலங்கவைக்கும் வீடியோ இதோ!

Published by
Surya

பீகார் மாநிலம், முசார்பர்பூர் ரயில் நிலையத்தில் இறந்துபோன தாயை தூங்கிக்கொண்டு இருக்கிறாள் என நினைத்து எழுப்ப முயற்சிக்கும் குழந்தையின் வீடியோ ஒன்று, பார்ப்போரின் கண்களை கலங்கவைக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், லட்சக்கணக்கான வெளிமாநில மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வேலையின்றி திண்டாடி வருகின்றனர். இதனையடுத்து பல தொழிலார்கள், தங்களது சொந்த ஊருக்கு நடந்தே செல்கின்றனர்.

தெலுங்கானாவில் ஒரு ‘ சுர்ஜித் ‘ 120 அடி ஆழ்த்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை

இதனை கவனித்த மத்திய, மாநில அரசு வேறு மாநிலங்களில் சிக்கி தவிக்கும் வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைக்கும் விதமாக, அவர்களுக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்தது. அதில் பல லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். ஆயினும், சிலர் நடந்தே தங்களின் சொந்த மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர்.

Uttar Pradesh News: 50 Migrant Workers From Maharashtra Test ...

இந்நிலையில் பீகார் மாநிலம், முசார்பர்பூர் ரயில் நிலையத்தில் 23 வயது பெண், புலம்பெயர்ந்தோருக்கான சிறப்பு ரயில்மூலம் தன குடும்பத்தினருடன் குஜராத்திலிருந்து கடந்த திங்கட்கிழமை பீகார் வந்தடைந்தார். இதையடுத்து, அப்பெண் ரயில்வே நிலைய பிளாட்பாரமில் போர்வையால் மூடிய நிலையில் இறந்து கிடந்தார். தன தாய் இறந்தது கூட தெரியாமல், அவரின் மேல் இருந்த போர்வையை அப்பெண்ணின் குழந்தை இழுத்து, எழுப்ப முயற்சி செய்யும் வீடியோ, தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வெளியாகி, காண்போரின் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது.

கடுமையான வெயில், போதிய உணவு, குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததே அவர் இறந்ததற்கு காரணம் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். அந்த வீடியோ, தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Published by
Surya

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

5 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

6 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

8 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

8 hours ago