சூரரைப்போற்று, மூக்குத்தி அம்மன், ஜகமே தந்திரம், ஆகிய மூன்று திரைப்படங்களும் ஓடிடியில் அதிக விலைக்கு விற்பனையான மூன்று திரைப்படங்கள்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சினிமா பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் பரவல் காரணத்தால் படங்களிற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டு திரையரங்குகளும் மூடப்பட்டது. மிக சிறந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படங்கள் திரையரங்குகள் மூடியிருந்த காரணத்தால் அமேசான் பிரேம் போன்ற ஓடிடி இணையத்தில் வெளியானது. குறிப்பாக மூக்குத்தி அம்மன், சூர்யா நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்புடன் உருவான சூரரைப்போற்று ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியானது.
அந்த வகையில் தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் விரைவில் பிரபல ஓடிடி தலமான நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. இதற்கான டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது ஓடிடியில் அதிகம் விற்பனையான 3 தமிழ் திரைப்படங்கள் பட்டியலை பார்க்கலாம், இந்த பட்டியலில் முதல் இடத்தில் விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் 55 கோடிக்கு விற்பனை யாகியுள்ளது. இரண்டாவதாக அமேசான் பிரேமில் வெளியான சூர்யாவின் சூரரைப்போற்று 42 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மூன்றாவதாக நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 26 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…