விடுதலை போராட்ட வீரர் சத்திய மூர்த்தி அவர்களின் பிறந்த நாள் இன்று….!

Published by
Rebekal

விடுதலை போராட்ட வீரர் சத்திய மூர்த்தி அவர்களின் பிறந்த தினம் வரலாற்றில் இன்று.

1887 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயத்தில் பிறந்தவர் தான் சத்தியமூர்த்தி. சென்னையில் உள்ள ஒரு கிறிஸ்தவ கல்லூரியில் பட்டம் பெற்ற பின்பதாக, இவர் சட்டம் பயின்று உள்ளார். சிறந்த பேச்சு திறன் காரணமாக காங்கிரசின் பிரதிநிதியாக இங்கிலாந்து அனுப்பப்பட்ட இவர் அங்கும் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தி உள்ளார். பின் 1930 ஆம் ஆண்டு பார்த்தசாரதி கோவிலில் இந்தியக் கொடி ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சைமன், கமிஷன் எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், சுதேசி இயக்கம், சத்தியாகிரகம் ஆகியவற்றிலும் இவரது பங்கு பெருமளவில் இருந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 1942 ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகம் செய்த காரணத்தால் கைது செய்யப்பட்டு நாக்பூரில் உள்ள அமராவதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்நேரம் ஏற்பட்ட முதுகுத்தண்டு காயம் காரணமாக மார்ச் 28-ஆம் தேதி 1943 ஆம் ஆண்டு சென்னை பொது மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

இவரது பணியை பாராட்டி தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்துக்கு சத்தியமூர்த்தி பவன் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இவர் தீரர், சொல்லின் செல்வர், நாவரசர் எனவும் புகழப்பட்டுள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் கூட சிறந்த சொல்லாற்றல் பெற்றவராக விளங்கி இருந்துள்ளார். இத்தனை பெருமைகள் கொண்ட சத்திய மூர்த்தி அவர்களின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

Published by
Rebekal

Recent Posts

UAE கோல்டன் விசா: இந்தியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் குடும்பத்துடன் வாழ அரிய வாய்ப்பு!

UAE கோல்டன் விசா: இந்தியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் குடும்பத்துடன் வாழ அரிய வாய்ப்பு!

எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…

49 minutes ago

கடலூர் விபத்து : “மக்கள் கொடுத்த அழுத்தத்தால் கேட்டை கீப்பர் திறந்திருக்கிறார்”..அன்பழகன் பேச்சு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…

1 hour ago

கடலூர் விபத்து : “கேட் திறந்து தான் இருந்தது” பள்ளி வேன் ஓட்டுநர் கொடுத்த வாக்குமூலம்!

கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…

2 hours ago

கடலூர் ரயில் விபத்து : அக்கா, தம்பி உயிரிழந்த பரிதாபம்!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…

3 hours ago

மீத்தேன் கண்காணிப்பு செயற்கைக் கோள் திடீர் மாயம்! நடந்தது என்ன?

பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…

3 hours ago

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து! காரணம் இது தான் ரயில்வே துறை விளக்கம்!

கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…

5 hours ago