இந்திய நூலக அறிவியலின் தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன் பிறந்த தினம் இன்று…!

Published by
Rebekal

இந்திய கணிதவியலாளரும், நூலக அறிவியலின் தந்தையுமாகிய எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களின் பிறந்த தினம் வரலாற்றில் இன்று.

1892 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வேதாந்தபுரம் எனும் கிராமத்தில் பிறந்தவர் தான் எஸ்.ஆர்.ரங்கநாதன். இவர் ராமமிருதம் மற்றும் சீதாலட்சுமி தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்து உள்ளார். ராமாமிருதம் ராமாயண கதையை கூறுவதில் பெரும்புகழ் பெற்றவராகவும், சுற்றத்தார் புகழும் வகையிலும் இருந்துள்ளார். ஆனால் ராமாமிருதம் தனது 30-வது வயதில் திடீரென காலமாகிவிட்டார். எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களின் ஆறு வயதிலேயே அவரது தந்தை ராமாமிருதம் மரணமடைந்த நிலையில், தனது பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் வளர்ந்து உள்ளார்.

அதன்பின் தனது 15 வயதிலேயே ருக்மணி எனும் பெண்ணை எஸ்.ஆர் ரங்கநாதன் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் குளத்தில் குளிக்கும் பொழுது ஏற்பட்ட விபத்து காரணமாக இவரது மனைவி இறந்துவிடவே, அதன் பின்பு இவர் இரண்டாவது முறையாக சாரதா எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளது. அதன் பின் 1924 இல் சென்னைப் பல்கலைக்கழக நூலகராக  நியமிக்கப்பட்ட இவர், பிறகு லண்டன் சென்று அங்குள்ள சிறந்த நூலகராகிய டபிள்யூ.சி.பி.சேயர்ஸிடம்நூல்களை வகைப்படுத்தும் கோட்பாட்டை பயின்றுள்ளார்.

அதன்பின் நூலகம் அறிவுசார் பிரிவினரை ஒன்றிணைத்து, சென்னை நூலகச் சங்கத்தை நிறுவியுள்ளார். 60க்கும் மேற்பட்ட நூல்கள், இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். 21 ஆண்டுகளுக்கு மேல் நூலகத் துறையில் தீவிரமாக செயல்பட்டு பல புரட்சிகளை கொண்டு வந்த இவர், 1945-இல் நூலகத்துறை பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். பின் நூலக அறிவியல் பட்டப் படிப்பை அறிமுகம் செய்து, தானே பலருக்கு கற்பித்து வந்துள்ளார்.

எனவே இந்திய நூலக சங்க தலைவராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பின் இவருக்கு டெல்லி பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. மேலும், இவர் பத்ஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். இந்திய அறிவியல் துறையின் தந்தை எனப் போற்றப்படும் கூடிய எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்கள் தனது 80 வயதில் 1972 இல் மறைந்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

2 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

3 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

3 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

4 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

4 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

5 hours ago