வீட்டு தோட்டத்தில் நிறைய செடிகள் வைத்திருந்தாலும் அதில் ஒரு துளசி செடி இருந்தால் அது நந்தவனமாக போற்றப்படும். இப்படிப்பட்ட துளசி செடியின் ஆன்மீக பலன்களை தற்போது பார்க்கலாம்.
இந்த கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி நாளானது வைகுண்ட ஏகாதசிக்கு இணையாக கருதப்படுகிறது. அன்றைய நாளுக்கு அடுத்த நாள் பிருந்தாவன துவாதசி நாளாக கொண்டாடப்படுகிறது. இதுவும் தீபாவளி, பொங்கல் பண்டிகை போல உற்றார் உறவினருடன் கொண்டாடப்பட வேண்டிய ஆன்மீக விழாவாகும்.
துளசி தாய் பகவான் விஷ்ணுவை மணந்து கொண்ட நாள் தான் பிருந்தாவன துவாதசி நாளாக கொண்டாடப்படுகிறது. அன்றைய நாள் துளசி செடியை அல்லது துளசி மாடத்தை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் இட்டு மாக்கோலம் இட்டு பூ அலங்காரம் செய்து மணப்பெண் போல அலங்கரித்துக் கொள்ள வேண்டும். துளசி அருகே பகவான் விஷ்ணு புகைப்படமோ அல்லது கிருஷ்ணர் புகைப்படமோ அல்லது ஒரு நெல்லி குச்சி வைத்து அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் வழிபடவேண்டும் நெல்லி குச்சியில் பகவான் விஷ்ணு இருப்பதாக ஐதீகம்.
அவ்வாறு வழிபடும்போது நெய்வேத்தியம் வைத்து பூஜைகள் செய்ய வேண்டும். பிருந்தாவன துவாதசி நாளன்று இந்த பூஜைகள் செய்தால் வீட்டில் சுப காரியம் நடப்பதற்கு தடையாக இருந்த அனைத்து கெட்ட விஷயங்களும் நீங்கும். மேலும் வீட்டில் செல்வம் பெருகும்.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…