பாகிஸ்தானில் நேருக்கு நேர் மோதிய இரண்டு விரைவு ரயில்கள் – 30 பேர் உயிரிழப்பு!

Published by
Rebekal
  • பாகிஸ்தானில் கோட்கி பகுதியில் இன்று காலை இரண்டு விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதி உள்ளது.
  • இந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர், 50 பேர் காயமடைந்துள்ளனர்.

தெற்கு பாகிஸ்தானில் உள்ள கோட்கி பகுதியில் இன்று காலை சையது எனும் விரைவு ரயிலும் மில்லட் எனும் விரைவு ரயிலும் நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரயில்களில் இருந்த 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 14 ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த விரைவு ரயில்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று மோதியதற்கான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் கடிதம்.!

அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் கடிதம்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…

3 minutes ago

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

1 hour ago

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

2 hours ago

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…

2 hours ago

ராயல் சல்யூட் : பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்.!

ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…

3 hours ago

போர் பதற்றம்., நேரடி தகவல்கள் வேண்டவே வேண்டாம்! பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…

4 hours ago