பாகிஸ்தானில் நேருக்கு நேர் மோதிய இரண்டு விரைவு ரயில்கள் – 30 பேர் உயிரிழப்பு!

Published by
Rebekal
  • பாகிஸ்தானில் கோட்கி பகுதியில் இன்று காலை இரண்டு விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதி உள்ளது.
  • இந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர், 50 பேர் காயமடைந்துள்ளனர்.

தெற்கு பாகிஸ்தானில் உள்ள கோட்கி பகுதியில் இன்று காலை சையது எனும் விரைவு ரயிலும் மில்லட் எனும் விரைவு ரயிலும் நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரயில்களில் இருந்த 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 14 ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த விரைவு ரயில்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று மோதியதற்கான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

6 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

7 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

8 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

8 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

9 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

9 hours ago