அமெரிக்காவில் நடுவானில் மோதி கொண்ட இரண்டு விமானங்கள்.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின், சால்டோட்னா விமான நிலையம் அருகே , இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் மாத்திரம் உயிருக்கு போராடிய நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மற்ற அனைவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஒரு விமானத்தில் மாநில பிரதிநிதி கேரி நாப் தனியாக இருந்துள்ளார். இவர், குடியரசுக் கட்சிக்காரராகவும், மாநில மன்றத்தின் இரு கட்சி பெரும்பான்மையின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்த விபத்தில் கேரி நாப்பும் உயிரிழந்துள்ளார்.
மாநில பிரதிநிதி கேரி நாப் உட்பட, பைலட் கிரிகோரி பெல்(67), வழிகாட்டி டேவிட் ரோஜர்ஸ்(40), காலேப் ஹல்சி (26), ஹீதர் ஹல்சி (25), மேக்கே ஹல்சி (24), மற்றும் கிர்ஸ்டின் ரைட் (23) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
கேரி நாப் அவர்களின் மரணத்திற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில், மற்ற 6 பேரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து, FAA மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரித்து வருகின்றன.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…