கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர பிரிட்டன் பிரதமர், 3 அடுக்கு எச்சரிக்கை முறையை இங்கிலாந்து முழுவதும் அமல்படுத்தியுள்ளார்.
உலகளவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. பொதுமக்கள் முதல் அதிபர் வரை யாரென பாராமல் கொரோனா பரவும் நிலையில், அதனை கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், பிரிட்டனில் கொரோனா பரவல் தற்பொழுது அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 13,000 பேருக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு கொரோனா பரவலின் இரண்டாம் அலை தவிர்க்கமுடியாதது என கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்நாட்டு பிரதமர் கூறினார்.
3 அடுக்கு எச்சரிக்கை முறை:
இந்தநிலையில், கொரோனா பரவலை தடுக்க, நடுத்தரம் (medium), உயர் (high) மற்றும் மிக உயர்ந்த (very high) என 3 அடுக்கு எச்சரிக்கை முறையை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இங்கிலாந்து முழுவதும் அமல்படுத்தியுள்ளார். இந்த விதிகள், நோய்த்தொற்று விகிதங்களுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகின்றதாக தெரிவித்தார்.
Medium:
நடுத்தர நிலை (medium), இதில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள பகுதிகளாகும். இந்த எச்சரிக்கை முறையில் 10 மருத்துவ குழுக்கள் தாயாராக உள்ளதாகவும், இந்த நடுத்தர கட்டுப்பாட்டில் பெரும்பாலான பகுதிகள் அடங்கும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
High:
உயர் நிலை (high), இந்த நிலை, தற்போது இங்கிலாந்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாட்டுக்கும். இதில் 144 தடை உத்தரவு போல தெருவில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களை தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க உதவுகிறது.
Very High:
மிக உயர்ந்த நிலை (Very High) என்பது, நோய் தொற்று அதிகளவில் இருக்கும் பகுதிகளாகும். இந்த பகுதிகளில் தேசிய சுகாதார சேவை (NHS) எல்லா இடங்களிலும் இருப்பார்கள். பார்கள், பப்கள் போன்ற இடங்கள் மூடப்பட்டிருக்கும்.
ஒரு வீட்டில் வசிப்பவர், மற்ற வீடுகளுடன் பழகுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளியூர்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில்லறை கடைகள் மற்றும் கல்வி தொடர்பான இடங்கள் செயல்பட அனுமதி விதிக்கப்படுவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…