மியான்மரில் தாக்குதல் நடத்தும் இராணுவத்துக்கு ஐநா எச்சரிக்கை!

Published by
Rebekal

மியான்மரில் உள்ள மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரக்கூடிய ராணுவத்தினருக்கு ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி வெற்றிபெற்றது. இந்த தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி ஆங் சான் சூகியின் புதிய அரசை ஏற்க மறுத்த மியான்மர் ராணுவம், ஆங் சான் சூகி தலைமையிலான கட்சியின் ஆட்சியை கவிழ்த்து ராணுவஆட்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆங் சான் சூகி மற்றும் மியான்மரில் உள்ள முக்கிய தலைவர்கள் பலர் ஒரே நாள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து அந்நாட்டு ராணுவம் அவசர நிலையை பிரகடனப்படுத்தி ராணுவ ஆட்சியை நடத்தி வருகிறது.

இந்நிலையில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மர் உள்ள மக்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போராட்டத்தை அடக்கும் விதமாக அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச்சூடு மற்றும் கண்ணீர் புகை குண்டு ஆகியவற்றை பயன்படுத்துகிறது. இந்த ராணுவத்தினரின் தாக்குதலில் 800-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்பொழுதும் இது குறித்து ஐக்கிய நாடுகள் சபை மியான்மர் ராணுவத்திற்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், மியான்மர் ராணுவ ஆட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாகவும், கயா மாகாணத்தில் மக்கள் நோயாலும் பசியாலும் உயிரிழந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மியான்மர் ராணுவ நடவடிக்கையால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கயா மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாகவும், இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள மக்கள் காடுகளில் தஞ்சம் புகுந்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, அங்குள்ள மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும், சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தக்கூடிய மியான்மர் ராணுவத்திற்கு சர்வதேச சமூகம் அளித்து வரக்கடிய உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஐநா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

2 hours ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

2 hours ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

3 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

4 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

6 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

6 hours ago