சின்ஜியாங் மாகாணத்தில் கட்டாய தொழிலாளர் பயன்படுத்தி பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதாகக் குற்றம் சாட்டி, கணினி பாகங்கள், பருத்தி உட்பட 5 ஐந்து சீனா பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது.
கொரோனாவிற்கு பிறகு அமெரிக்க-சீனா உறவுகள் மோசமடைந்துள்ளன. ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீனா தான் உலகெங்கிலும் கொரோனா நோய் பரவ அனுமதித்ததாக குற்றம் சாட்டினார். மேலும், சின்ஜியாங் மாகாணத்தில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், ஹாங்காங்கின் சுயாட்சி, மற்றும் தொழில்நுட்ப திருட்டு ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்க-சீனா உறவுகள் மேலும் மோசமடைந்துள்ளன.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில், சின்ஜியாங் மாகாணத்தில் கட்டாய தொழிலாளர்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பருத்தி, ஆடை, கணினி பாகங்கள் உள்ளிட்ட 5 சீன பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொருட்களை சீன அரசாங்கம் உய்கூர் சிறுவர்கள், பெண்கள் உள்பட சிறுபான்மை மக்களை கட்டாய தொழிலாளர்களாக பயன்படுத்தி பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…