“வென்டாஸின் நரமாமிசம்”;தாயை கொலை செய்து சாப்பிடவருக்கு 15 ஆண்டுகள் சிறை..!

Published by
Edison

ஸ்பெயினில் வசிக்கும் இளைஞர் ஒருவர்,தனது தாயை கொலை செய்து சாப்பிட்டதனால்,அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்பெயினின் வென்டாஸ் பகுதியில் வசிக்கும் ஆல்பெர்டோ சான்செஸ் கோமெஜ் என்பவர்,கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு,தனது 69 வயதான தாயை கழுத்தை நெரித்து கொன்று,பின்னர் இரண்டு சமையலறை கத்திகளைப் பயன்படுத்தி தாயின் உடலை சிறிய துண்டுகளாக வெட்டி சமைத்து சாப்பிட்டுள்ளார்.

பின்னர்,ஆல்பெர்டோவின் தாயை காணவில்லை என்று அவரது தாயின் நண்பர் அளித்த புகாரை தொடர்ந்து,சந்தேகத்தின் பேரில் 2019 ஆண்டு பிப்ரவரி 23 அன்று,ஸ்பெயின் போலீசாரால் ஆல்பெர்டோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில்,இந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதிகள்,”குற்றம் சாட்டப்பட்ட ஆல்பெர்டோ,தனது தாயை கழுத்தை நெரித்து கொலை செய்து,பின்னர் அவரது உடலை கத்தியால் வெட்டி,குறைந்தது 15 நாட்களுக்கு மேல் வைத்து சாப்பிட்டார்.மேலும், அவரது நாய்க்கும்  உணவளித்தார்.

மீதமுள்ள சில பகுதிகளை வீட்டைச் சுற்றியுள்ள பல்வேறு பிளாஸ்டிக் கொள்கலன்களிலும்,குளிர்சாதன பெட்டியிலும் சேமித்து வைத்தார்.மேலும் எஞ்சியுள்ள சிலவற்றை பிளாஸ்டிக் பைகளில் போட்டு குப்பை தொட்டியில் வீசினார் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனவே,ஆல்பெர்டோவை 15 ஆண்டுகள் மற்றும் ஒரு சடலத்தை இழிவுபடுத்தியதற்காக ஐந்து மாதங்கள் சிறையில் அடைக்க வேண்டும்.மேலும்,அவர் தனது மூத்த சகோதரருக்கு 60,000 யூரோக்கள் (, 000 73,000) இழப்பீடு வழங்க வேண்டும்”,என்று கூறி தீர்ப்பளித்தனர்.

இதனைத் தொடர்ந்து,இந்த சம்பவத்திற்கு பிறகு “வென்டாஸின் நரமாமிசம்” என்று அப்பகுதி அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

24 minutes ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

45 minutes ago

ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா? – நடந்தது என்ன? விமானப்படை பதில்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…

46 minutes ago

திடீரென மயக்கம் போட்ட விஷால்…இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…

1 hour ago

சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!

மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…

2 hours ago

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

3 hours ago