சச்சினுடன் ஒப்பிடுகையில் கோலி சற்று வித்தியாசமானவர். சச்சின் அமைதியானவர். கோலி ஆக்ரோசமானவர். – வாசிம் அக்ரம்.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின். அவரது ரசிகர்களுக்கு சச்சின் தான் கிரிக்கெட் உலகின் கடவுள். அவரை பின்பற்றியே சர்வதேச கிரிக்கெட் உலகில் பல வீரர்கள் உருவாக்கியுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் சச்சினின் சாதனையை முறியடிக்க இவரால் முடியும் என நம்பிக்கை அளித்து வரும் வீரர் என்றால் அது விராட் கோலி தான்.
இருவரையும் ஒப்பிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கருத்து கூறியுள்ளார். வாசிம் அக்ரம் தனது யு-டியூப் பக்கத்தில் கருத்து கூறுகையில், ‘ பேட்டிங் திறனில் சச்சினும் கோலியும் வேறுவிதமான வீரர்கள். சச்சினுடன் ஒப்பிடுகையில் கோலி சற்று வித்தியாசமானவர். சச்சின் அமைதியானவர். கோலி ஆக்ரோசமானவர்.
சச்சினை அவுட் செய்ய முயற்சி செய்து. அதில் அவர் அவுட் ஆகாமல் இருந்துவிட்டால், சச்சின் இன்னும் உறுதியுடன் களத்தில் நிற்பார். ஆனால், கோலியை அவுட் செய்ய முயற்சி செய்து அவர் அவுட் ஆகாமல் இருந்தால் அவர் கோபப்படுவார். தன்னிலையை சற்று இழப்பார். ஒரு பேட்ஸ்மேன் கோபப்படும்போது பந்தை விளாசுவார். அந்த சமயம் தான் அவரை அவுட் ஆக்க அதிக வாய்ப்புகள் பந்துவீச்சாளருக்கு கிடைக்கும்.’ என தனது கருத்துக்களை வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…