கிரிப்டோ நன்கொடைகளை ஏற்றுக்கொள்வதை நிறுத்துவதாக விக்கிமீடியா அறக்கட்டளை அறிவிப்பு.
உலகின் மிக பிரபலமான வலைத்தளங்களில் ஒன்றான விக்கிப்பீடியா. சுமார் 250க்கும் மேற்பட்ட மொழிகளில் தகவல்களை பயனர்களுக்கு கொடுத்து வருகிறது. இணைய சேவையை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் விக்கிப்பீடியா தளத்தை நிச்சயம் பயன்படுத்துவார்கள். விக்கிப்பீடியாவில் தனி மனிதன், நிறுவனங்கள், அரசு என அனைத்து விவரங்களும் இலவசமாக கிடைக்கும். வணிக விளம்பரங்கள் எதுவும் இல்லாமல் இதில் கிடைக்கின்ற தகவல்கள் அனைத்தும் லாப நோக்கமற்ற விக்கிப்பீடியா அறக்கட்டளைக்கு சொந்தமானது.
லாபம் நோக்கமற்ற இந்த விக்கிப்பீடியாவில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்ட நிலையில், கடந்த ஆண்டுகளாக நன்கொடை வசூலில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியா உட்பட சில நாடுகளில் விக்கிப்பீடியா நன்கொடை வசூலித்து வருகிறது. இந்த நிலையில், விக்கிபீடியாவை நடத்தும் விக்கிமீடியா அறக்கட்டளை, கிரிப்டோ நன்கொடைகளை ஏற்றுக்கொள்வதை நிறுத்துவதாக கூறியுள்ளது. விக்கிபீடியாவை நடத்தும் விக்கிமீடியா அறக்கட்டளை (WMF), இனி கிரிப்டோகரன்சியில் நன்கொடைகளை ஏற்க மாட்டோம் என்று அறிவித்துள்ளது.
மேலும், WMF அதன் BitPay கணக்கையும் மூடுவதாகக் தெரிவித்துள்ளது. இது கிரிப்டோகரன்சியை நேரடியாக நன்கொடை அளிக்கும் முறையாக ஏற்றுக்கொள்ளும் திறனை நீக்கிவிடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. விக்கிமீடியா அறக்கட்டளை முதலில் பிட்காயின், பிட்காயின் கேஷ் மற்றும் ஈதர் ஆகியவற்றில் நன்கொடைகளை ஏற்கத் தொடங்கிய 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…