“பயங்கரமான சீனா வைரஸை முற்றிலுமாக ஒழிப்போம்” – அதிபர் டிரம்ப் உரை

Published by
Surya

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த அதிபர் டிரம்ப், “பயங்கரமான சீனா வைரஸை முற்றிலுமாக ஒழிப்போம்” என தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா டிரம்ப்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டனர். மேலும் அதிபர் டிரம்ப், சிகிச்சைக்காக வாஷிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், 4 நாட்களுக்கு பின் கடந்த திங்கட்கிழமை அன்று வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். அப்பொழுது புகைப்படத்திற்கு போஸ் குடுத்த அவர், தான் அணிந்திருந்த முகக்கவசத்தை கழற்றி, தனது ஆதவர்களிடையே கையசைத்தார். இது உலகளவில் பெரும் சர்ச்சையானது.

இந்தநிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் தனது ஆதவாளர்களிடம், “நான் நன்றாக இருக்கிறேன். இந்த பயங்கரமான சீனா வைரஸை நம் தேசம் முற்றிலுமாக ஒழிக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்” என கூறினார். மேலும், “நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தல், அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலாகும். தைரியமாக வெளியே சென்று தைரியமாக வாக்களியுங்கள்” என உரையாற்றினார்.

அதுமட்டுமின்றி, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஆகியோரை இடதுசாரி அரசியல்வாதிகள் என விமர்சித்தார். அவர்கள் நடத்தும் அவதூறு பிரச்சாரத்தை நாம் அனைவரும் நிராகரிக்க வேண்டிய நேரம் இது எனவும் அந்த உரையில் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

11 minutes ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

42 minutes ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

45 minutes ago

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

1 hour ago

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…

3 hours ago