கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் நம்மை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது?

Published by
Rebekal

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களா நீங்கள், உங்களை பாதுகாத்து கொள்ள என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். 

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். பல்வேறு மாநில அரசுகள் மருத்துவமனையில் படுக்கையறை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகளை அனுமதிக்கவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும், வீட்டில் தனிமை படுத்தப்பட்டிருந்தாலும் நம்மை நாம் பாதுக்கப்பட்டதற்கு என்ன செய்யலாம் என்ன செய்ய கூடாது என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள்.

கொரோனா தொற்றிருப்பதாக சந்தேகித்தால் செய்யவேண்டியவை ….

உங்களுக்கு கொரோனா தோற்று இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால், முதலில் உங்களை தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். மருத்துவரை அணுகி ஆர்.டி மற்றும் பி.சி ஆர் சோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தான் இருக்க வேண்டும் என்று இல்லை. ஏனென்றால் சிலருக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு முறையான உணவுகளை எடுத்துக்கொண்டாலே சரியாகி விடும். வெளியில் சென்றால் முக கவசத்தை அணிந்து செல்லுங்கள். ஆக்சிஜன் அளவு 95 சதவீதத்திற்கு குறைவாக இருந்தால் மருத்துவமனைக்கு சென்று முறையாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

செய்யக்கூடாதவை …

தனிமைப்படுத்தப்பட்ட உங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். ஆட்டோ சவாரியை முற்றிலுமாக தவிர்த்திடுங்கள். சுயமாக எந்த மருந்துகளையும் எடுத்து கொள்ள வேண்டும். பிறரின் பொருட்களை நீங்கள் உபயோகிப்பதையும், உங்கள் உணவை பிறருடன் பகிர்ந்து கொள்வதையும் நிறுத்தி கொள்ளுங்கள்.

கொரோனா உறுதி செய்யப்பட்டால் செய்ய வேண்டியவை….

ஆர்.டி மற்றும் பி.சி.ஆர் சோதனை செய்து மருத்துவர்களின் ஆலோசனையை முறையாக கடைபிடியுங்கள். உணவுகளை சரியான நேரத்தில் உட்கொண்டு அதிக நீர் ஆகாரங்களை எடுத்து கொள்ளுங்கள். அடிக்கடி குளித்து தூய்மையாக இருங்கள், முக கவசம் அணிந்து சமூக இடைவெளிகளை பின்பற்றி நடவுங்கள். மருத்துவமனையில் இருந்தாலும் முறையான மருந்துகளை உட்கொண்டு தூய்மையை கடைபிடியுங்கள். தும்மும் போதும் இருமும் போதும் கைக்குட்டை கொண்டு முகத்தை மூடி கொள்ளுங்கள். அடிக்கடி கைக்குட்டையை கழுவுங்கள். கைகளை தண்ணீர் கொண்டு அடிக்கடி கழுவுங்கள், அல்லது சரியான சானிடைசர்களை பயன்படுத்துங்கள்.

செய்ய கூடாதவை …

பிறருடன் உங்கள் உணவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டாம். பொது இடங்களுக்கு செல்வதை முற்றிலுமாக தவிர்த்திடுங்கள். ஆட்டோ மற்றும் கார் சவாரியை முழுவதுமாக தவிர்த்திடுங்கள். மற்றவர்களிடமிருந்து முழுவதுமாக உங்களை தனிமை படுத்தி கொள்ளுங்கள்.

Published by
Rebekal

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

8 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

8 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

9 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

9 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

11 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

12 hours ago