பிரபல சமூக வலைத்தளமான வாட்ஸப், வருகின்ற 2021 ஆம் ஆண்டு முதல் சில குறிப்பிட்ட ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஓஎஸ் 9 அல்லது அதற்கு மேல் மற்றும் Android 4.0.3 வெர்சன் அல்லது அதற்கு மேல் அப்டேட் செய்யாத பழைய ஸ்மார்ட்போன் பயனர்கள், 2021-லிருந்து வாட்ஸ் அப் செயலியை உபயோகப்படுத்த முடியாது.
நீங்கள் ஐஓஎஸ் 4 அல்லது அதற்கு குறைந்த மாடலைப் பயன்படுத்தும் பயனர் என்றால், அடுத்தாண்டு முதல்நீங்கள் வாட்ஸ் அப் சேவையை இழக்க நேரிடும். இதேபோல, சாம்சங் கேலக்ஸி எஸ் 2-ஐ பயன்படுத்தினால் அவர்களுக்கும் இது பொருந்தும்.
அதுமட்டுமின்றி, இந்த குறிப்பிடப்பட்ட அப்டேட் செய்யாத பயனர்கள் பேஸ்புக்கின் தலைமையில் இயங்கும் சில பயன்பாடுகளையும் இழக்க நேரிடும் என கூறப்படுகிறது.
இந்த குறிப்பிட்ட மொபைல்களை வைத்திருப்பவர்கள், தங்களது மொபைல் களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், வேறு மொபைல்களையோ அல்லது வாட்ஸ் அப்-க்கு பதிலாக வேறு செயலியைதான் பயன்படுத்த வேண்டும்.
ஐஓஎஸ் பயனர்கள், வாட்ஸ் அப்-ஐ தொடர்ந்து பயன்படுத்த தங்களது மொபைல்களை பின்வருமாறு அப்டேட் செய்துகொண்டால் இந்த பிரெச்சனையிலிருந்து தவிர்க்கலாம். அதன்படி, Settings – General- Software Update.
இந்த வாட்ஸப் தடைபடும் பிரச்சனை இங்கு குறிப்பிட்ட சில மொபைல்களில் ஏற்படும் எச்.டி.சி சென்சேஷன், சாம்சங், கூகிள் நெக்ஸஸ்-எஸ், சோனி எரிக்சன் எக்ஸ்பீரியா ஆர்க், எல்ஜி ஆப்டிமஸ் 2-எக்ஸ், சாம்சங் கேலக்ஸி எஸ் ஐ 9000, எச்.டி.சி டிசையர் எஸ் உள்ளிட்ட மொபைல்கள் அடங்கும்.
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…