தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2015ல-ஆம் ஆண்டு ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் தனி ஒருவன். இந்த படத்தில் அரவிந்த் சாமி மாஸ்ஸான வில்லனாக நடித்து பிரமிக்க வைத்தார்.இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதியின் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் படம் 100 கோடி வரை வசூல் செய்து சூப்பர் ஹிட்டானது.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மோகன் ராஜா தனி ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு அதற்கான கதை எழுதும் பணியை முடித்தார். ஜெயம் ரவிக்கு பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த காரணத்தால் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளார். அதைபோல் இயக்குனர் மோகன் ராஜா லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீ மேக்கை நடிகர் சிரஜ்ஜீவியை வைத்து எடுத்து வருகிறார்.
இந்த நிலையில், ஜெயம் ரவி பொன்னியின் செல்வன், கல்யாண் படம் முடித்து விட்டு வரும் போது இயக்குனர் மோகன் ராஜாவும் லூசிஃபர் படத்தை முடித்துவிடுவார். அதன் பிறகு தனி ஒருவர் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…