உங்கள் விசுவாசம் எங்கே? மக்கள் நீதி மைய கட்சியிலிருந்து விலகியவர்களிடம் சனம் செட்டி கேள்வி!

Published by
Rebekal

மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து விலகிய பிரமுகர்களிடம் உங்கள் விசுவாசம் எங்கே? முதல்முறையாக மக்கள் நீதி மையம் கட்சிக்கு வாக்களித்த மக்களை நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள் என சனம் ஷெட்டி கூறியுள்ளார்.

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் பெரும்பான்மையான இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அதிமுக எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர்களாக இருந்தவர்களும் ஆங்காங்கு பல இடங்களில் நல்ல ஓட்டுகளை பெற்று இருந்தனர்.

அதுபோல மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் நடிகர் கமலஹாசன் அவர்களும் மிக சொற்பமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தார்.இதனையடுத்து கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து தொடர்ச்சியாக அந்த கட்சியின் பொதுச்செயலாளர், துணைத் தலைவர் மற்றும் மதுரவாயலில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர் பத்மபிரியா ஆகியோரும் கட்சியை விட்டு வெளியேறிய நிலையில், இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார் சனம் செட்டி.

அதில், உங்கள் விசுவாசம் எங்கே? கட்சியின் வேட்பாளராக பிரச்சாரம் செய்யும்போது மட்டும் எதற்காக சேர்ந்தீர்கள்? லட்சம் பேரிடம் ஏன் பேசினீர்கள். ஆனால் தற்பொழுது விலகும் போது மட்டும் தனிப்பட்ட காரணத்தால் விலகுகிறோம் என குறிப்பிட்டு விலகி  இருக்கிறீர்கள் ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் கமலஹாசன் ஒரு அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை எனவும், அவரின் தொலைநோக்கு பார்வை அவருக்கு போதும் எனவும் சனம் செட்டி பாராட்டி பதிவிட்டுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்! குவியும் வாழ்த்துக்கள்!

இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்! குவியும் வாழ்த்துக்கள்!

சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…

3 hours ago

போஸ் கொடுப்பது மட்டும்தான் பிரதமரின் வேலையா? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!

டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…

3 hours ago

தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…

3 hours ago

பிளே ஆஃப் செல்லப்போவது யார்? மும்பை vs டெல்லி இடையே கடுமையான போட்டி!

மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…

4 hours ago

தேசத்தில் அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறதென்றால் அது பாஜக! செல்வப்பெருந்தகை விமர்சனம்!

சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…

4 hours ago

CSK vs RR : அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் – வைபவ்..! சென்னை மீண்டும் தோல்வி.!

டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…

11 hours ago